ஐந்து வயதில் தொலைந்த மகளை 13 வருடங்களின் பின் கண்டு கண்ணீர் வடித்த தந்தை!
ஐந்து வயதில் சிறு குழந்தையாக இருக்கும்போது தொலைந்த தன மகளை வயதில் தற்போது தேடிக் கண்டுபிடித்துள்ளாராம் ஒரு தந்தை. இந்தச் சம்பவமானது சீனாவில் இடம்பெற்றுள்ளது.
இந்த நெஞ்சை நெகிழ்த்தும் சம்பவமானது சீனாவின் குவாங்கோ பையின் சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்று அனைவரையும் கண்ணீர்மல்க வைத்துள்ளது.
கைலீ பவேர்ஸ் என்கின்ற பெயரைக் கொண்ட இந்தப் பெண்ணினுடைய பிறப்புப் பெயர் லியாங் ஜிங்லங் என்பதாகும். இவர்
ஆம் ஆண்டு குவாங்டொங்கில் உள்ள இவரது வீட்டிற்கு வரும் வழியில் தொலைந்துள்ளார். அப்போது அவரைக் கண்டெடுத்த நபர் ஒருவர் அவரைப் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
அதன் பின் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட இந்தப் பெண்ணை அமெரிக்க தம்பதியினர் ஒருவர் தத்தெடுத்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் இந்தப் பெண் தொலைந்த பெற்றோரைக் கண்டுபிடுக்கும் வலைதளத்தில் இணைந்து எழுதியுள்ளார். அப்போது இவருடைய கதையைப் படித்த இவருடைய தந்தை இவரைத் தொடர்பு கொண்டுள்ளார்.
அதன்பின் தற்போது தந்தையும் மக்களும் ஒருவரையொருவர் சந்தித்து கண்ணீர்மல்கிய சம்பவம் விமான நிலையத்தில் இருந்த ஏனையோரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்