ஈரான் இராணுவத் தளபதி கொலை ; அமெரிக்க கொடியை நாட்டினார் ட்ரம்ப்!
அமெரிக்க விமானப் படையினரின் தாக்குதலில் ஈரான் இராணுவத் தளபதி கொல்லப்பட்டுள்ளார். இந்தச் செய்தி கிடைத்ததும் அமெரிக்க அதிபர் டொனால் ட்ரம்ப் தனது ருவிட்டர் பக்கத்தில் அமெரிக்கக் கொடியை பதிவுசெய்துள்ளார்.
அண்மையில் ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகம், ஈரான் ஆதரவுக் கிளர்ச்சியாளர்களால் சூறையாடப்பட்டது எனக் கூறப்படும் நிலையில், அமெரிக்கப் படையினருக்கு அதிபர் ட்ரம்ப் குறித்த அறிவுறுத்தலை விடுத்திருந்தார்.
இந்நிலையில்லேயே ஈரான் இராணுவத் தளபதி கொல்லப்பட்டுள்ளார்.
— Donald J. Trump (@realDonaldTrump) January 3, 2020