போதைப் பொருள் வைத்திருந்தவருக்கு மரணதண்டனை!
போதைப் பொருள் விற்பனை செய்த நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (13) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
13.23 கிராம் ஹெரோயினை வைத்திருந்தமை மற்றும் அவற்றை விற்பனை செய்தமை தொடர்பான குற்றச்சாட்டிற்கமையவே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தண்டனைக்குட்படுத்தப்பட்டவர் 35 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையாவார்.
கொழும்பு மாளிகாவத்தையை சேர்ந்த இவர், 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 22 ஆம் திகதியன்று மாளிகாவத்தைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்த குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபரால் இவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.