எலும்பு தேய்மானம் மூட்டு வலி குணமாக இதைவிட வேறு மருத்துவம் தேவை இல்லை..!! அதிகம் பகிருங்கள்…!!
எலும்பு தேய்மானம்,மூட்டுவலி, இவை 30 வயதை கடந்த ஆண் / பெண் இரு பாலருக்கும் வந்துவிடும். இன்றைய காலத்தில் இள வயதினருக்கும் எலும்பு தேய்மானம் வந்து தொல்லை கொடுக்கிறது. அத்துடன் மூட்டு வலி இவற்றிக்கு காரணம் கல்சிய குறைப்பாடு தான். இன்று நாம் பார்க்கப் போகும் மருத்துவம் எலும்பு
தேய்மான பிரச்சனைக்கான தீர்வு தான். செய்முறையை பார்க்கலாம்.
பிரண்டை இது சாதாரணமாக கிராமங்களில் கிடைக்க கூடியது என்றாலும் நாம் வீட்டிலும் வளர்க்கலாம். இந்த பிரண்டையின் சிறிய துண்டு ஒன்றை வீட்டில் நாட்டினாலும் ஒரு மாதத்தில் நன்றாக வளர்ந்து விடும். பிரண்டையை எடுத்து அதன் நாரை நீக்கிவிடுங்கள். நாரை நீக்கும் முன் கையில் தேங்காய் எண்ணெய் அல்லது நல் எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள்.
இப்போது பிரண்டையின் நார் நீக்கி அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து அதில் சிறிது நெய் சேருங்கள். இப்போது நெய்யில் காய்ந்த மிளகாய்,பூண்டு,கறிவேப்பிலை , சின்ன வெங்காயம் போன்றவற்றை சேர்த்து அதனுடன் பிரண்டையையும் போட்டு பொன் நிறமாகும் வரை வதக்கிக் எடுத்துக் கொள்ளுங்கள்.
இவை நன்றாக ஆறிய பின் மிக்ஸி ஜாரில் இவற்றை போட்டு அதில் உப்பு சிறிதளவு, புளி சிறிதளவு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். கட்டாயமாக புளி சேர்க்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும். இதனை நீங்கள் வாரம் ஒரு செய்து சாப்பிட வேண்டும். சாதம், சப்பாத்தி, இட்லி தோசை எதனுடன் வேண்டுமானாலும் இந்த சட்னியை சேர்த்து சாப்பிடலாம்.
அதிக வலி உள்ளவர்கள் வாரம் இரண்டு முறையும் சாதாரண வலி உள்ளவர்கள் வாரம் ஒரு முறையும் சாப்பிடுங்கள். இதில் இருக்கும் கல்சியம் மற்றும் விட்டமின் டி எலும்பு தேய்மானத்தை தடுப்பதுடன் மூட்டு வலியையும் குணப்படுத்துகிறது.