நீங்கள் அணியும் மாஸ்க் விடயத்தில் கவனம் கொள்ளுங்கள், காரணம் மாஸ்கின் ஊடாகவும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாம்..! படித்து அனைவரும் அறிய பகிருங்கள்…!!
கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பரவினாலும் சில நாடுகள் அதனை கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்கின்றது. அந்த வரிசையில் இந்தியா, இலங்கை போன்ற நாடுகள் பாராட்டுகள் பெற்று வருகிறது. இதில் பல நாடுகள் தங்கள் நாட்டிற்குள் கொரோனா வைரஸ் நுழைவதையே முற்றாக தடை செய்துள்ளது என்று கூறலாம்.
இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு மாஸ்க் என்கிற முகமூடி விடயத்தில் மக்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது மக்கள் மாஸ்க் அணிந்து வெளியே செல்கிறனர். அந்த மாஸ்க் பின் வீட்டில் ஏதோ ஒரு மூலையில் அல்லது நாட்காலியில் கழட்டி போட்டு விடுகின்றனர். பின்பு தேவையாகும் போது எடுத்து மாட்டிக் கொள்கின்றனர்.
மாஸ்க் அணிவது மூக்கு, வாய் ஊடாக கொரோனா தொற்று ஏற்படாமல் இருப்பதற்கு தான். ஆனால் மாஸ்க் ஒருமுறை பயன்படுத்திவிட்டு அப்படியே வைத்தால் அதில் தொற்றும் கொரானா வைரஸானது மாஸ்க்கில் சுமார் 7 நாட்கள் உயிர் வாழும், இதனால் நீங்கள் பயன்படுத்திவிட்டு மறுபடியும் பயன்படுத்தும் போது உங்களை கொரோனா வைரஸ் இலகுவாக தாக்குகிறது.
மருந்து மாஸ்க் அணிந்தாலும் இந்த ஆபத்து உள்ளது. அதனால் நீங்கள் முகத்தை மூட எதனை பயன்படுத்தினாலும் வீட்டிற்கு வந்ததும் கண்டிப்பாக 2 மணி நேரங்கள் வெயிலில் நன்றாக காயவையுங்கள். சோப் போட்டு கழுவ கூடியவையாக இருந்தால் நன்றாக சோப் போட்டு கழுவி காயவைத்து மடித்து வைத்து பயன்படுத்துங்கள். நாம் சின்ன விடயம் என அலட்சியம் செய்யும் இந்த விடயத்தால் கூட ஆபத்து ஏற்படலாம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்..!!