பிரான்ஸின் தலைநகர் பாரிஸ் வீதிகளில் மக்கள் செய்யும் கேவலமான செயல்கள். ! வைரலாகும் புகைப்படங்கள் இதோ..!!
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மக்களின் செயற்பாடுகள் வருத்தமளிப்பதாக பிரான்ஸ் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் ஆட்டம் காண வைத்த நோய் தொற்றானது பிரான்ஸில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
இத்தாலி, ஸ்பெயின் நாடுகளை விட பிரான்ஸில் இறப்பு வீதம் அதிகரித்திருந்து. இதனால் பிரான்ஸ் பல கட்டுப்பாடுகளை விதித்து நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
இந்த நிலையில் பிரான்ஸ் மக்களின் செயலானது மகிழ்ச்சியளிக்க கூடியதாக இல்லை என அரசு தெரிவித்துள்ளது. சமூக இடைவெளி பேணப் படுவதில்லை. அத்துடன் தலை நகரான பாரிஸில் சுமார் 20 மீட்டருக்கு ஒரு மாஸ்க் அல்லது கையுறைகளை மக்கள் மக்கள் கழட்டி போட்டுவிட்டு செல்கின்றனர்.
மாஸ்க் மற்றும் கையுறைகள் மூலம் நோய் பரவும் ஆபத்து உள்ள நிலையிலும் மக்கள் அதனை கவனத்தில் கொள்ளாமல் நடந்துகொள்கின்றனர் என குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளது..!