துடிக்க துடிக்க வெட்டிக் கொல்லப் பட்ட உடுமலைபேட்டை சங்கர் கொலை குற்றவாளிகளில் ஒருவர் விடுதலை..! மற்றையவர்களின் தண்டனை குறைப்பு..!!
பட்டப் பகலில் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் துடிக்க துடிக்க வெட்டிக் கொலை செய்யப் பட்ட உடுமலைபேட்டை சங்கரின் கொலை குற்றவாளிகள் 6 பேரில் ஐவரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப் பட்டதுடன் முக்கிய குற்றவாளியாக கருதப் பட்டவர் விடுதலை செய்யப் பட்டுள்ளார்.
பழனியை சேர்ந்த கெளசல்யா சங்கர் என்ற தாழ்ந்த ஜாதி இளைஞரை காதலித்த நிலையில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பெற்றோரை மீறி திருமணம் செய்துகொண்டார். ஒரு வருடம் கூடா ஆகாத நிலையில் உடுமலைபேட்டை பேருந்து நிலையத்தில் வைத்து கெளசல்யா மற்றும் சங்கர் 3 பேர் அடங்கிய கும்பலால் கொடூரமாக தாக்கப் பட்டனர்.
இதில் சங்கர் மரணமடைந்த நிலையில் உயிருக்கு போராடிய கெளசல்யா காப்பாற்றப் பட்டார். இந்த நிலையில் கொலை குற்றவாளிகளை அடையாளம் காட்டிய கெளசல்யா தந்தை, உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை பெற்றுக் கொண்டார்.
இதனை எதிர்த்து குற்றவாளிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிர்மல் & சத்திய நாராயணன் ஆகியோர் இன்று தீர்ப்பு வழங்கினார்கள். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப் பட்ட கெளசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை செய்யசெய்யப் பட்டதுடன் மற்ற 5 பேரின் தண்டனையும் குறைக்கப் பட்டுள்ளது..!!