ஆண்களுக்கு போல் பெண்களுக்கு முகத்தில் வளரும் முடியை நிரந்தரமாக நீக்கலாம்..! இதை செய்யுங்கள்..!
பெண்களுக்கு தேவையற்ற ரோமங்கள் அதாவது ஆண்களுக்கு போல் மீசை, தாடி, மற்றும் நெற்றிப் பகுதியில் என ரோமங்கள் வளர்வதுண்டு இவை அழகை கெடுத்துவிடுவது மட்டும் இன்றி கேலி கிண்டல்களுக்கும் முகம் கொடுக்க வைக்கிறது. இவற்றை நிரந்தரமாக எப்படி நீங்கலாம்..முடி வளர்வதை எப்படி தடுக்கலாம் என பார்ப்போம்..
இதற்கு தேவையான பொருட்கள்: பார்லி விதைகள் இது சிறிய கோதுமை போல் இருக்கும் கடையில் பார்லி என கேட்டால் கொடுப்பார்கள். இதனை கொண்டு வந்து ஒரு மணி நேரம் வெயிலில் காய வைத்து மாவாக்கிக் கொள்ளுங்கள். அடுத்து கோரைக்கிழங்கு தூள் இது கடையில் சாதாரணமாக கிடைக்கக் கூடியது தான். எலுமிச்சை பாதி. பால், மற்றும் சமையளுக்கு பயன்படுத்தும் மஞ்சள்.
செய்முறை: கோரைக்கிழங்கு தூள் அரை கரண்டி, பார்லி தூள் அரை கரண்டி, மஞ்சள் கால் கரண்டி, எலுமிச்சை சாறு சிறிதளவு இவற்றுடன் பேஸ்ட் போல் கலந்து கொள்ள தேவையான அளவு காய்ச்சிய பால் .இவை அனைத்தையும் நன்றாக பேஸ்ட் பதத்திற்கு மிக்ஸ் செய்து தேவையற்ற ரோமங்கள் உள்ள இடத்தில் பூசி 40 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள்.
பின் விரல்களால் மெதுவாக தேய்த்து விட முடி பேஸ்ட்டுடன் வந்துவிடும். ஒரு நாள் விட்டு ஒரு இதனை மிக்ஸ் செய்து பயன்படுத்துங்கள். ஒரு மாதத்தின் பின் தேவையற்ற இடங்களில் இருக்கும் ரோமங்கள் வருவது முற்றிலும் தடைப்பட்டு விடும்..!