எந்த ஒரு செயற்கை பொருளும் இன்றி இயற்கையாகவே உங்கள் கூந்தலை அடர்ந்தியாகவும், கருமையாகவும் மாற்றலாம்..! இதோ சூப்பர் மருத்துவம்..!!
அடர்த்தியான தலைமுடியை பெற வேண்டும் என்பது நம்மில் பலரின் பிரயத்தனமாக இருக்கின்றது. நாம் அனேகமான வேளைகளில் நம்முடைய தலைமுடியைப் பற்றிக் கவலைப் பட்டிருப்போம். அதற்குக் காரணம் தலைமுடி உதிர்வு, பொடுகு, சிக்கு போன்ற அனைத்துமே. இவற்றையெல்லாம் இல்லாமல் செய்து தலைமுடி அடர்த்தியாக வளர என்னதான் செய்ய வேண்டும்?
முடி அடத்தி குறைவதற்கான காரணங்களாகப் பின்வருவகவற்றைக் குறிப்பிடலாம்.
நாம் உபயோகிக்கும் இரசாயனப் பொருட்கள் கலந்த ஷாம்பூக்கள்
தவறான தலையிழுப்பு முறை தலைமுடியில் அதிக அழுக்குகள் படிதல்,தலைமுடிக்கு போதுமான எண்ணெய் கிடைக்காமைஎன்வே இரசாயனம் கலந்த ஷாம்பூ பயன்படுத்துவதை முதலில் நிறுத்தினாலே முடி அடர்த்தி குறைவு பிரச்சனை சரியாக ஆரம்பிக்கும்.
தலைமுடி அடர்த்தியை அதிகரிக்க, முறையான உணவுப்பழக்கம், மனஅழுத்தமில்லா வாழ்க்கைச்சூழல் இவற்றுடன் நம் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டும் முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யலாம். அந்த கலவைகள் எவையென்று தற்கோது பார்க்கலாம்.
விட்டமின் C உள்ள உணவுகள்.தலைமுடி அடத்தியாக்க வேண்டுமென ஒருவர் விரும்பினால் முதலில் வைட்டமீன் C அதிகமுள்ள உணவுகளை அதிகமாக சேர்க்க வேண்டும். வைட்டமீன் C அதிகமுள்ள உணவுகள் முடியின் வேர்க்கால்களை நன்கு வலுவடையச் செய்யும். வைட்டமீன் C அதிகமுள்ள ஆரஞ்சு, கிவி போன்ற பழங்களை தினமும் சாப்பிட வேண்டும்.
நெல்லிக்காய்.நீளமான அலையலையான கூந்தலைப் பெற ஒருவர் நிச்சயம் இந்திய நெல்லிக்காயை பயன்படுத்தியே ஆக வேண்டும். பேஸ்ட் போன்றோ அல்லது எண்ணையாகவோ இதைப்பயன்படுத்தி வாருங்கள் ஒரு சில வாரங்களிலேயே நீங்கள் அடர்த்தியான கூந்தலுக்கு சொந்தக்காரர் ஆவீர்கள். ஒரு டீஸ்பூன் நெல்லிக்காய் பொடியை இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணையில் நன்கு கலக்கி பின்னர் சூடு செய்து வடிகட்டி எடுத்து தலையிலும் கூந்தலிலும் தேய்க்க வேண்டும். நன்னு மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம்.
எண்ணைய்க் குளியல்,எண்ணைய் மசாஜ் தலைக்கு வழக்கமாகச் செய்வது மிக முக்கியமானது. இதனால் தலையில் இரத்த ஓட்டம் அதிகமாகி முடி வேர்கள் வலுவாகி முடிகொட்டுவது நிற்கிறது. சற்று வெதுவெதுப்பாக எண்ணையை சூடுசெய்து தலையில் வட்ட முறையில் மசாஜ் செய்ய வேண்டும். ஜுஜுபா எண்ணைய் அல்லது சுத்தமான தேங்காய் எண்ணைய் சிறந்தது.
கற்றாழை: தலைமுடி உதிர்வுக்கு கற்றாழை ஒரு மிகச்சிறந்த மருந்து. தலையை ஈரப்பதமாக வைக்கவும் தேவையான ஊட்டச்சத்து அளிக்கவும் வல்லது இந்த கற்றாழை. கற்றாழை ஜெல் எடுத்து தலையில் தடவி ஒரு மணிநேரத்திற்குப் பின் சாதாரண ஷாம்பூ போட்டு குளிக்க வேண்டும்.
வெந்தயம்:எல்லோருடைய சமையலறையிலும் இருக்கும் ஒரு பொருள் வெந்தயம் . இதை ஒரு இரவு நீரில் ஊறவைத்து மறுநாள் காலை ஒரு பேஸ்ட் போல அரைத்து தலையில் தடவவேண்டும். மண்டை ஓட்டில் நன்கு படும்படி தடவ வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து தலையை கழுவிக் கொள்ளலாம். வாரம் ஒருமுறை இதைச் செய்யலாம்.
கறிவேப்பிலை:கறிவேப்பிலை இலைகளை கொத்தாக எடுத்து நன்கு கழுவி உலர வைத்து 2 கப் அளவு தேங்காய் எண்ணையில் போட்டு அகலமான பாத்திரத்தில் சூடு படுத்த வேண்டும் கொதிக்கும் வரை. 10 நிமிடம் வரை கொதிக்க விட்டு ஆற வைத்துவிட வேண்டும். வடிகட்டிய எண்ணையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்து பயன்படுத்தலாம். இரவு படுக்கும் முன் இந்த எண்ணையால் தலைக்கு நன்கு மசாஜ் செய்து காலையில் அலசிக் கொள்ள வேண்டும்.