சுடு தண்ணீரை வைத்து செய்யும் மேஜிக் தெரியுமா உங்களுக்கு.? ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்..!!
பெண்கள் தங்கள் முகத்தை அழகாக்குவதற்காக என்னவெல்லாமோ முயற்சிகள் செய்வார்கள். அவர்கள் முயன்று பார்ப்பதெல்லாம் பெரும்பாலும் கடையில் வாங்குகின்ற அழகுசாதனப் பொருட்களாகவே இருக்கும் இவைகளால் நிறைய ஆபத்துக்கள் இருக்கின்ற போதிலும் உடனடித் தீர்வு என்று அதை நாடுபவர்கள் பலர். அத்தோடு நம்ம நாட்டு வைத்திய செயன்முறைகளைப் பயன்படுத்தும் பொறுமையும் நேரமும் கூட சிலருக்கு கிடைப்பதில்லை.
இந்நிலையில் முகப் பொலிவுக்கு சுடு நீர் ஆவி ஒன்றே நல்ல பலனைக் கொடுக்கும் என்பது எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும். சுடுநீராவி பிடிப்பதால் சருமத் துளைகள் விரிவடைவதாகவும் அத் துளைகளில் தங்கியிருக்கும் அழுக்குகள் மற்றும் கிருமிகளும் வெளியேற்றப்படும் என்றும் கூறுகின்றனர்.
எவ்வாறு முகத்திற்கு ஆவி பிடிப்பது? இது ஒரு விசயமே இல்லீங்க. சூடான நீரை வைத்து, ஒரு போர்வைக்குள் நீங்கள் உட்கார்ந்து, அந்த நீரின் முன் முகத்தை வைத்து, அதிலிருந்து வரும் ஆவி முகத்தில் படும்படி ஒரு 30 நிமிடம் உட்கார வேண்டும்.
இவ்வாறு நீங்கள் செய்து வந்தால்,மூக்குப் பகுதியில் காணப்படும் கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின்பு சுத்தமான டல் ஒன்றினால் மிருதுவாகத் தெய்த்தால் , மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்துவிடும். மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். பின்னர் அவை வராது போய்விடும்.
ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். எப்படியெனில் ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய்விடும்.
சுடுநீராவி உங்களுக்கு முதுமை தோற்றம் ஏற்படுவதைத் தடுக்கும். எவ்வாறென்றால், சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும்.