இந்த 10 ரூபாய் பொருட்களை கொண்டு 100 ரூபாய் மதிப்புள்ள அழகூட்டும் சோப்களை வீட்டிலேயே தயாரிக்கலாம்.! வீட்டு தேவைக்கும் வியாபாரத்திற்கும்.! அதிகம் பகிருங்கள்..!
வணக்கம் பிரண்ட்ஸ்..!இன்றைய சூப்பர் டிப்ஸ் பகுதியில் சோப் எப்படி செய்வதென்று பார்க்கப் போகின்றோம். சாதாரணமாக சோப் கடையில் வாங்கும் போது அதற்காக அதிக விலை கொடுக்கின்றோம். எந்த ஒரு சோப்புமே கெமிக்கல் கலக்காமல் செய்யப் படுவதில்லை. அதிலும் சில சோப் வகைகளில் அதிக கெமிக்கல் கலக்கப் படுகின்றது. அதனால் சரும வரட்சி ஏற்பட வாய்ப்புகள் இருப்பதோடு தொடர்ந்து பாவிக்கும் போது சரும நோய்களும் உருவாகின்றது. இந்த தொல்லைக்கு நாமே விடுதலை கொடுத்து குளியல் சோப் நாமே செய்துகொள்ளலாம்.
எப்படி சோப் செய்வது? சோப் செய்வதற்கு என்ன எல்லாம் தேவைப்படுகின்றது என பார்க்கலாம்.இதற்கு தேவையான பொருட்கள்: காஸ்டிக் சோடா( இதில் இருக்கும் கெமிக்கலால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் அதிகம் சேர்க்க வேண்டாம்.) தேங்காய் எண்ணெய், தண்ணீர், மற்றும் ஜவ்வாது சிறிதளவு.
முதலில் காஸ்டிக் சோடா ஒரு கப் மற்றும் இரண்டு கப் நீர் விட்டு முட்டையை அடிப்பது போல் நன்றாக அடித்து நீர் போல் கரைத்துகொள்ளுங்கள். அதனுடன் 7 கப் தேங்காய் எண்ணெய் சேர்த்து மீண்டும் நன்றாக ஒரு 5 நிமிடம் வரை அடித்து மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.
அதனுடன் சிறிதளவு ஜவ்வாது சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள். இப்போது கலவை தயார். என்ன வடிவத்தில் சோப் வேண்டுமே அந்த வடிவத்தில் உள்ள கோப்பைகளில் கலவையை உற்றுங்கள்.
இப்போது சோப் கலவை தயார். அன்பு உறவுகளே இதில் எந்த கெமிக்கல் எபெக்ட்ஸும் ஏற்படாது.
அதிக அளவான தேங்காய் எண்ணெயின் மகத்துவம் காஸ்டிக் சோடாவின் சக்தியை குறைத்துவிடுகிறது. இது உங்கள் முகம் முதல் உடல் முழுவதும் பயன்படுத்தலாம். இதனை வியாபாரமாக கூட செய்யலாம். இது எமது கைகளால் தயாரிக்கப் படுவது என்பதால் எமது மனதிற்கும் ஆறுதல்.
இதில் நீங்கள் கற்றாலை ஜெல், போன்றவற்றை கூட சேர்த்து முகத்திற்கு பயன்படுத்தலாம். வியாபாரத்திற்கு கற்றாலை ஜெல் கலக்காதீர்கள் காரணம் நீண்ட நாட்கள் வைத்திருக்க முடியாது. இது தொடர்பான மேலதிக தகவல்கள் கீழ் உள்ள வீடியோவில் உள்ளது. பார்த்து பயன்பெற்று பகிருங்கள்…!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”