தமிழகம் மற்றும் சென்னை உட்பட 14 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிப்பு..!!
தமிழகம் மற்றும் சென்னை உட்பட 14 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இந்த மாவட்டங்களில் பலத்த மழை பெய்யாத வேளையிலே நீர்மட்டம் அதிகரித்தது எப்படி என்ற கேள்வி அனைவரின் மனதில் காணப்பட்டுள்ளது.
கொளுத்தி எரியும் வெயிலில் சிக்கி தவிக்கும் தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழை அதிகம் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வடகிழக்கு பருவ மழை பெய்ய ஆரம்பித்து அக்டோபர் மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் சில தினங்கள் மட்டுமே பலத்த மழை பெய்துள்ளது. எனினும் அடுத்தடுத்த தினங்களில் மழை பெய்வதில்லை எனினும் ஆரம்பத்தில் பொழிந்த சராசரி மழையால், சில மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்தது.
திருவண்ணாமலை, சேலம் ,ஈரோடு ஆகிய மாவட்டத்தில் மட்டும் 2 மீட்டர் அளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது. அது போன்று ராமநாதபுரம், கோவை, நாமக்கல், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 0.50 மீட்டர் வரை நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது. சென்னையை பொறுத்த வரைக்கும் அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி, மாதவரம் போன்ற இடங்களில் 3 தொடக்கம் 2 மீட்டர் வரை ராயபுரம், அண்ணா நகர், கோடம்பாக்கம், பெருங்குடி ஆகிய இடங்களிலும் 1 தொடக்கம் 2 மீட்டர் வரை நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட அதிக குடிநீர் பிரச்சினையில் தவிர்த்த சென்னையில், அதிகளவு மழை பெய்யாத போது நிலத்தடி நீர்மட்டம் எப்படி அதிகரித்தது என கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. சென்னை மாநகராட்சியின் சார்பில் மழை நீர் கட்டமைப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதன் மூலம் அண்மையில் சென்னையில் நிலத்தடி நீர் அதிகரித்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தண்ணீர் தட்டுப்பாட்டை குறைக்க மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகளும் தற்போது கைகொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த இரண்டு வருடங்களாக சென்னை, சுற்றுவட்டார புறநகர் இடங்களில் மழை பெய்வது குறைவாகவே உள்ள நிலையில் அண்மையில் நிலத்தடி நீர் உயர்வு தண்ணீர் பஞ்சத்திலிருந்து தப்பிக்க வரப்பிரசாரமாக அமைகிறது. எதிர்வரும் தினங்களில் மழை தீவிரமாக வலுவடையும் பட்சத்தில், அடுத்த வருடம் சென்னை மக்கள் தண்ணீர் பஞ்சம் இன்றி நிம்மதியாக மகிழ்ச்சியாகவும் வாழலாம். அதற்கு அமைய பொதுமக்கள் மழைநீர் கட்டமைப்பை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பிரதானமாக அமைகிறது.