ரயில் தண்டவாளத்தில் இருந்து மது அருந்திய போது ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த 4 மாணவர்கள்…!!! கோவையில் நடந்த சோகம்…!!
கோவையில் ராவுத்தர் பாலம் அருகில் ரயில் பாதையில் நள்ளிரவு12 மணியில் அளவில் சூலூர் தனியார் கல்லூரி மாணவர்கள் 4 பேர் மது அருந்தியுள்ளனர். அந்த வேளையில் அந்த பாதை ஊடக அதி வேகத்துடன் வந்த ஆலப்புழா-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில், இந்த இளைஞர்கள் மீது மோதிய விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த ரயில் விபத்தில் நான்கு மாணவர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
மேலும் இந்த ரயில் விபத்து தொடர்பாக தகவல் அறிந்த போத்தனூர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிதாபமாக பலியான கல்லுரி மாணவர்கள் கொடைக்கானல் பகுதியை சேரந்த சித்திக்ராஜா, ராஜபாளையத்தை சேர்ந்த கருப்பசாமி, கவுதம் மற்றும், நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த ராஜசேகர் என தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்லூரி படிப்பை முடித்த இந்த மாணவர்கள் தங்கள் அரியர்ஸ் தேர்விற்காக கல்லூரிக்கு வந்ததாகவும், அவர்கள் ரயில் பாதையில் மது அருந்திய போது ரயில் மோதி இறந்துள்ளதாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.