காதலி கண் முன்னே விரிவுரையாளர் அடித்ததால் தற்கொலை செய்து கொண்ட இளைஞன்..!! இந்தியாவில் நடந்த சோகம்…!!
இந்தியாவில் தர்மபுரி மாவட்டம் மாக்கனூர் கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவரின் மகன் 23 வயதுடைய நவீன் என்பவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். நவீன் அரசு கலைக்கல்லூரியில் படித்த போது அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியை காதலித்து வந்தார்.
இந்த நிலையில், காதலர் தினத்தையொட்டி நவீன் தனது காதலிக்கு காதலர் தின வாழ்த்து தெரிவிக்க கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது, கல்லூரி வளாகத்தில் இளைஞனும், மாணவியும் நின்று பேசி கொண்டு இருந்ததை கண்டு அங்கு வந்த கல்லூரியின் கவுரவ விரிவுரையாளர் கோபி, மாணவியை கண்டித்ததுடன், இளைஞனை தாக்கி அவருடைய செல்போனை பறித்து உடைத்துள்ளார். இதனால், காதலி முன்பே அடித்ததால், மனமுடைந்த இளைஞன் வீட்டுக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்னர் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நவீனின் உடலை எடுத்து சென்று பேடரஅள்ளியில் உள்ள கவுரவ விரிவுரையாளர் கோபி வீட்டு முன்பு வைத்து தகராறில் ஈடுபட்டனர். அப்போது சிலர் கோபியின் வீட்டை அடித்து நொறுக்கியுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இண்டூர் பொலிஸார் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதால் போலீசார் இளைஞனை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக இண்டூர் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி மாணவிக்கு காதலர் தின வாழ்த்து தெரிவித்த இளைஞனை விரிவுரையாளர் தாக்கியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.