மணமகன் இல்லாமல் ஆன்லைன் மூலம் நடந்து முடிந்த திருமணம்..!!
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த முஹம்மது அட்னான் கான் என்பவர் வூதி அரேபியாவில் பணியாற்றி வருகிறார். எம்பிஏ பட்டதாரியான முகம்மது அத்னான் கான் என்பவருக்கும், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த இளம் பெண்ணுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடத்த பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால் உலகெங்கிலும் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக, சவூதி கடும் பயணக்கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், ஹம்மது அட்னான் கானிற்கு விசா கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனால் திருமணத்திற்கு மணமகனின் குடும்பத்தார் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதையடுத்து மணமகன் மற்றும் மணமகளின் குடும்பத்தார் பேசி முடிவெடுத்து, ஆன்லைன் மூலமாக திருமணம் செய்துள்ளனர். திருமண விழா மற்றும் கையொப்பம் அனைத்தும் மொபைல் வீடியோ அழைப்பின் மூலமாகவே முடித்து வைக்கப்பட்டன.