நாளை முதல் மத்திய அமைச்சர்கள் அனைவரும் அலுவலகங்களுக்கு சென்று பணியாற்ற வேண்டும் – பிரதமர் மோடி
நாளைய தினம் முதல் மத்திய அமைச்சர்கள் அனைவரும் அலுவலகங்களுக்கு சென்று பணியாற்ற வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எதிர்வரும் 14 ஆம் திகதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மத்திய அமைச்சர்கள் அனைவரும் வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில்,நலிய தினம் (13) முதல், மத்திய அமைச்சர்கள் அனைவரும், அவர்களது அலுவலகங்களுக்கு சென்று பணியாற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். அலுவலகங்களில், சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும். கூடுதல் செயலாளர்கள் மற்றும் அதற்கு மேல் பதவியில் உள்ளவர்களும் பணியாற்ற வேண்டும். இரண்டு, மூன்று மற்றும் நான்காம் நிலை அலுவலர்கள், சுழற்சி முறையில் அலுவலகங்களுக்கு வந்து பணியாற்ற வேண்டும் என பிரதமர் கேட்டு கொண்டுள்ளார்.