திருமணமான 3 மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட புதுமாப்பிள்ளை..!!
திருமணமான 3 மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட புதுமாப்பிள்ளையான இராணுவ வீரரின் செயல் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 மாதத்திற்கு முன்னர் தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்திரநாத் என்ற இராணுவ வீரரும் அதே பகுதியை சேர்ந்த ராதிகா என்ற பெண்ணுக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. சுரேந்திரநாத் இராணுவ வீரராக பணியாற்றி வந்த நிலையில், திருமணத்திற்கு பின்னர் இராணுவ பணிக்காக வேறு ஊருக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில், கடந்த மாதம் விடுமுறைக்கு ஊர் திரும்பிய நிலையில், மனைவியுடன் சுரேந்திரநாத்துக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மனைவி ராதிகாவை பிரிந்து சுரேந்திரநாத் தனியாக வாழ்ந்து வந்தார். தான் மனைவியை பிரிந்து தனியாக வாழ்வதை நினைத்து மன அடைந்து காணப்பட்ட சுரேந்திரநாத், தனது வீட்டு மாடியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.