அத்தையுடன் ஏற்பட்ட வாக்குவாதம்.. ஆத்திரத்தில் அத்தையை காய்கறி வெட்டும் கத்தியால் குத்தி கொலை செய்த நபர்..!! பொலிஸ் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!
சென்னையில் கொளத்தூர் பாலாஜி நகரைச் சேர்ந்த கணேஷ் என்பவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவரது அத்தை குணசுந்தரி, கணேஷின் வீட்டுக்கு வந்ததாகவும், அப்போது இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரின் வாக்குவாதம் முற்றியதால் காய்கறி அறுக்கும் கத்தியால் குணசுந்தரியை (அத்தை) கணேஷ் குத்தி கொன்று விட்டு கணேஷ் தப்பியோடியுள்ளார். இது தொடர்பாக வழங்கப்பட்ட தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொளத்தூர் பொலிஸார் குணசுந்தரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தெரிவிக்கையில், கணேஷ் அதே பகுதியில் உறவுக்கார பெண் ஒருவருடன் முறையற்ற உறவில் இருந்ததாகவும், அதனை குணசுந்தரி தட்டிக்கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கொலை நடந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர். தப்பியோடிய கணேஷை பொலிசார் தேடி வரும் நிலையில் இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.