கொரோனா வைரஸ் காரணமாக ஜெர்மனியில் ஒத்திவைக்கப்பட்ட பன்டெஸ்லிகா கால்பந்து போட்டி இன்று மீண்டும் ஆரம்பம்..!!
உயிரை பறிக்கும் கொரோனா வைரஸ் மத்தியிலும் இன்றைய தினம் ஜெர்மனியில் பன்டெஸ்லிகா கால்பந்து போட்டி தொடங்குகின்றது. விறுவிறுப்பாக நடந்து வந்த 57வது பன்டெஸ் லிகா கால்பந்து போட்டி கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில். இன்றைய தினம் ஜெர்மனி அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார வழிகாட்டுதலோடு பன்டெஸ்லிகா போட்டி மீண்டும் தொடங்குகிறது.
இன்றைய தினம் 6 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் மொத்தம் 18 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோதவுள்ளது. திருத்தப்பட்ட புதிய போட்டி அட்டவணைப் படி அடுத்த மாதம் 27 ஆம் திகதி வரை இந்த போட்டி நடைபெறும். வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் ஆட்டங்கள் நடக்கும். இந்த போட்டியில் முதல்முறையாக 5 மாற்று ஆட்டக்காரர்கள் வரை பயன்படுத்தப்படவுள்ளனர். அவற்றில் டார்ட்மன்ட்-எப்.சி.ஸ்கால்க் (இரவு 7 மணி), லிப்ஜிக்-பிரைபர்க் (இரவு 7 மணி), என்ட்ராச்-எம் கிளாட்பேச் (இரவு 10 மணி) ஆகிய அணிகளின் மோதலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்1 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. குறித்த போட்டி நடாத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கட்டுப்பாடுகள் விதிகள்
- போட்டிக்கு ரசிகர்கள் யாரும் ஸ்டேடியத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
- போட்டி ஏற்பாட்டாளர்கள், வீரர்கள், பயிற்சியாளர்கள், ஒளிபரப்பு தாரர்கள், ஊடகத்தினர், நடுவர்கள், கால்பந்து நிர்வாகிகள், மருத்துவ உதவியாளர்கள், பாதுகாப்பு ஊழியர்கள், பந்து எடுத்து போடும் சிறுவர்கள் என்று வகைப்படுத்தப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திலும் அதிகபட்சமாக 100 பேர் அனுமதிக்கப்படுவார்கள்.
- களத்தில் உள்ள வீரர்கள், நடுவர்கள் தவிர அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.
- வீரர்களுடன் கைகுலுக்கக்கூடாது.
- கோல் அடிக்கும் போது மகிழ்ச்சியில் கட்டிப்பிடித்து கொண்டாடக்கூடாது