நாடு கடந்து காதலிக்கும் காதலர்களுக்காக சுவிஸ் அரசு எடுத்த அதிரடி முடிவு..! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் காதலர்கள்..!!
உலகத்தை ஆட்டிப் படைக்கும் நோய்த் தொற்று சில நாடுகளில் குறைந்து வருவதால் அந்த நாடுகள் இது வரை போடப் பட்டிருந்த ஊரடங்கு சட்டத்தினை தளர்த்தி வருகிறது. இந்த நிலையில் சுவிஸும் சில கட்டுப் பாடுகளை தளர்த்த ஆரம்பித்துள்ளது.
அதன் படி சுவிஸில் வசிப்பவர்கள் நாடு தாண்டி வாழும் தங்கள் காதலர்களை சந்திப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே திருமணமாகி லாக்டவுன் காரணமாக பிரிந்து வாழ்ந்த கணவன் மனைவி, குழந்தைகள் சேர்வதற்கு அனுமதி அளித்திருந்த நிலையில் தற்போது ஜேர்மனி அல்லது ஆஸ்திரியாவில் வசிக்கும் காதலன் காதலிகளை சந்தித்த அனுமதி அளித்துள்ளது.
சுவிஸ், ஆஸ்திரியா, ஜெர்மனி இந்த மூன்று நாடுகளில் இருக்கும் காதலர்களுக்கும் இந்த செய்தி மகிழ்ச்சியை அளித்துள்ளது. இது குறித்து சுவிஸ் அரசு வெளியிட்ட அறிக்கையின் படி நோய்த் தொற்று குறைந்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது.
மாஸ்க், மற்றும் உடலில் உஷ்ணத்தை பரிசோதனை செய்த பின் அவர்கள் தங்கள் காதலர்களை சந்திக்கலாம். அன்புக்குறியவர்களின் உயிர்களை பாதுகாத்துக் கொள்வதுடன் அன்பை பரிமாறிக் கொள்ளுங்கள் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த செய்தியால் குறித்த நாடுகளில் உள்ள காதலர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்..!!