இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் விடுத்த சவாலை ஏற்றுக்கொண்ட சச்சின்..!!
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் யுவராஜ் விடுத்த சவாலை சச்சின் ஏற்றுக்கொண்டு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்திய முழுவதும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே உள்ளனர். இதனால், விளையாட்டு வீரர்கள் சமூகவலைதளம் மூலம் சக வீரர்களுக்கு சவால் விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் யுவராஜ் பந்தைத் தொடர்ச்சியாக அடித்துக்கொண்டிருந்தார். அதன் மூலம் தான் இப்படித்தான் வீட்டிலிருந்து கொரோனா வைரஸ் தொற்றுடன் போராடுவதாகவும், இந்தச் சவாலை சச்சின் டெண்டுல்கர், ரோகித் ஷர்மா, ஹர்பஜன் சிங் ஆகியோர் ஏற்றுக்கொண்டு வீடியோ வெளியிட வேண்டும்” என அவர் தெரிவித்திருந்தார்.
யுவராஜ் சிங் வெளியிட்ட சவாலை ஏற்றுக்கொண்ட சச்சின் தெண்டுல்கரும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சுவாரசியமான விஷயம் என்ன என்றால், சச்சின் தனது இரு கண்களைக் கருப்புத் துணியால் கட்டிக்கொண்டு யுவராஜ் கொடுத்த சவாலைச் செய்துள்ளார். மேலும் இந்தச் சவாலை யுவராஜ் ஏற்றுக் காணொளி வெளியிட வேண்டும் அவர் தெரிவித்துள்ளார். குறித்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
In these challenging times, I am committed to staying at home to prevent the spread of #Covid19 and will #KeepItUp as long as it is required.
I further nominate master blaster @sachin_rt hit man @ImRo45 and turbanator @harbhajan_singh @UN @deespeak pic.twitter.com/20OmrHt9zv
— yuvraj singh (@YUVSTRONG12) May 14, 2020
I am challenging you back @YUVSTRONG12, but this time with a twist!!???♂️?
All I can ask everyone to do is take care and stay safe! pic.twitter.com/px4usxZPkT
— Sachin Tendulkar (@sachin_rt) May 16, 2020