குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட கணவன்..!!
இந்தியாவில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 38 வயதுடைய மணீஷ்குமார் என்பவர் பெங்களூரிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி 32 வயதுடைய சந்தியா பீகாரை சேர்ந்தவர் தான். இந்நிலையில் மணீஷ்குமாருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தம்பதியினருக்கு இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கு இடையில் சந்தியாவிடம் பேசுவதற்காக அவரின் உறவினர்கள் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் அவரின் செல்போனை தொடர்பு கொண்டுள்ளனர்.
ஆனால் சந்தியாவின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால், அவரது உறவினர்கள் நேரில் வந்து பார்க்க வந்துள்ளனர். அப்பொழுது சந்தியாவின் உறவினரைப் பார்த்த மணீஷ், பதட்டத்தில் 3வது மாடிக்குச் சென்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, அங்கு சந்தியா பிணமாக கிடந்துள்ளதைக் கண்டு பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மணீஷ், சந்தியாவின் உடல்களை மேட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் மணீஷ்குமாருக்கும், சந்தியாவுக்கும் கள்ளத்தொடர்பு விவகாரம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த மணீஷ்குமார், சந்தியாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன் பின்னர் கொலையை மறைக்க அவர் 2 நாட்களாக சந்தியாவின் உடலை வீட்டிலேயே வைத்துள்ளார். ஆனால் சந்தியாவின் உறவினர்கள் திடீரென வந்ததால் மணீஷ் குமார் பதட்டத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் இது குறித்து பொலிஸார் பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.