மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக கோபம் அடைந்து மனைவி மற்றும் குழந்தையை கொன்று தூக்கில் தொங்க விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட கணவன்.!!
இந்தியாவில் சத்திஷ்கர் மாநிலத்தின் கோர்பா நகரை சேர்ந்த 28 வயதுடைய அஷிக் குமார் மற்றும் 25 வயதுடைய ராகினி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தாம்பத்தினருக்கு அழகான குழந்தை ஒன்று உள்ளன.இந்நிலையில் நேற்றைய தினம் (சனிக்கிழமை) காலை வெகு நேரமாகியும் அஷிக்குமாரின் வீடு திறக்கப்படாமல் இருந்தது. அதையடுத்து சந்தேகமடைந்த பக்கத்து வீட்டுக்காரர் குமாரின் வீட்டு கதவை தொடர்ந்து தட்டியும் அவர்கள் திறக்காததால் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.
மேலும் இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் அருகில் வசிப்பவர்கள் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது உள்ளே மூவரும் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன் பின்னர் மூவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதையடுத்து பொலிஸார் தெரிவிக்கையில், கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை குமார் மற்றும் ராகினி சண்டை போட்டுள்ளனர், இருவரும் மிகவும் சத்தமாக சண்டை போட்டதாக அருகில் வசிப்பவர்கள் கூறியுள்ளனர். இதன் காரணமாக ஏற்பட்ட கோபத்தில் மனைவி மற்றும் குழந்தையை கொன்று தூக்கில் தொங்க விட்டு குமாரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருதுகிறோம். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணையை நடத்தி வருகிறோம் என பொலிஸார் கூறியுள்ளனர்.