தன்னுயிரைக் கொடுத்து நூற்றுக்கணக்கான உயிர்களைக் காத்த வீரன்
நேற்று இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டிருந்ததும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் 400 ற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதும் நாம் அறிந்த விடயமாகும். இன்னும் அங்கு மீட்புப் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் இறந்தவர் தொகை இன்னும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகின்றது.
இந்நிலையில் நிலநடுக்கத்தின்போது விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகாமல் காப்பாற்றும் பணியில் ஈடுபட்ட விமானநிலைய போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் ஒருவர் தனது பணியை நிறைவேற்றிய போதிலும் தொடர்ந்து ஏற்பட்ட அசம்பாவிதங்களால் படுகாயமடைந்து பின்னர் உயிரிழந்துள்ளார்.
விமானம் புறப்படும் நேரத்தில் புவியதிர்வு உணரப்பட்டபோது மற்றையவர்கள் பாதுகாப்புக் கருதி ஓடியபோதிலும் அன்ரோனியஸ் குணவான் அகுங் (21 வயது) எனும் கட்டுப்பாட்டாளர் விமாம் புறப்படும் வேளையில் சைகை காட்டும் பணியில் கோபுரத்தின் நான்காவது தளத்தில் இருந்துள்ளார்.
எனினும் விமானம் பாதுகாப்பாகப் புறப்பட்ட பின்னரேயே பாதுகாப்பு கருதி அங்கிருந்து குதித்துள்ளார். இதில் அவரது கால்கள் மற்றும் கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட முறிவினால் சிகிச்சை பயனின்றி அவர் இறந்துள்ளார்.
இச் செயலால் அங்கு அம் மக்களால் அவர் போற்றப்படுபவராகியுள்ளார்.