ஒலிம்பிக் வீராங்கனை இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சின் ஆலோசகராகின்றார்.
இலங்கையின் குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சின் விளையாட்டு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்றையதினம் விளையாட்டுத் துறை அமைச்சில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவருக்கான நியமனக் கடிதத்தினை அமைச்சர் பைசர் முஸ்தபா அவரிடம் வழங்கி வைத்துள்ளார். குறுந்தூர ஓட்ட வீராங்கனையான சுசந்திகா இலங்கை சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றி பதக்கங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.