இன்ஸ்ட்டாகிராமில் 18 வயதிற்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த இளைஞன்.!அதிர்ந்து போன பொலீஸார் இதோ வைரலாகும் வீடியோ.!!
இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் உள்ள 18 வயதிற்குட்பட்ட சிறுமிகளை காதல் வலையில் விழ வைத்து பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த இளைஞர் ஒருவரை பொலீசார் கைது செய்துள்ளனர். விருதாச்சலம் அருகே உள்ள மகேந்திர நல்லூரைச் சேர்ந்தவர் ஜெயகுமார். 19 வயதாகும் இவர் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இளைஞராவார்.
இவரது கணக்கை பின் தொடர்வோர் பட்டியலில் அனைத்தும் சிறுமிகளாகவே உள்ளனர். அடிக்கடி இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிடும் ஜெயகுமார் புகைப்படங்களுக்கு கருத்திடம் சிறுமிகளிடம் பேசி அவர்களை மயக்கி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவரது வலையில் வீழ்ந்தவர்களில் கடலூர், சிதம்பரத்தை 15 வயது சிறுமியும் ஒருவர்.
தந்தையை இழந்த குறித்த சிறுமி தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்துள்ளார். இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் குறித்த இளைஞனுடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சிறுமியை காதலிப்பதாக ஜெயகுமார் கூறியுள்ளார். பின் சிறுமியக் சந்திக்க விரும்புவதாக கூறியுள்ளார். சிறுமியின் தாய் அவசர வேலையாக வெளியே போய் இருந்த நிலையில் குறித்த இளைஞரை சிறுமி வீட்டிற்கு அழைத்துள்ளார்.
வீட்டில் இருவரும் தனிமையில் தகாத உறவில் இருந்த போது திடீரென வீட்டிற்கு வந்த தாய் அதிர்ந்து போய் உள்ளார். அவர் வீட்டிற்குள் செல்ல முயன்ற போது சிறுமியின் தாயை வெளியே தள்ளி ஜெயகுமார் கதவை மூடியுள்ளார். இதனை தொடர்ந்து தாயார் கத்தி கூச்சலிட்டு அயலவரை கூப்பிட்டதுடன் கதவை உடைத்து இளைஞனை வெளியே எடுத்ததுடன் சிறுமியையும் மீட்டுள்ளனர்.
உடனடியாக பொலீஸுக்கு புகார் கொடுத்த நிலையில் இளைஞரின் போனை பறித்து பொலீஸார் பரிசோதனை செய்த போது பல சிறுமிகளோட தகாத உறவில் இருந்து எடுத்த வீடியோக்கள் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து குறித்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் பொலீஸார் கைது செய்துள்ளனர்.!