மூட்டு வலி உயிர் போகிறதா.!? என்ன செய்தாலும் குணமாகவில்லையா.!? இதோ உடனடி தீர்வு…!!
மூட்டு வலி என்பது இன்று அனைவருக்கும் ஏற்படுகின்ற ஒன்று தான். அடுப்படி தொடக்கம் ஆகாயம் வரை வேலை செய்கின்ற அனைவருக்கும் இருக்கும் மூட்டு வலி பிரச்சனைக்கு இலகுவாக இன்று தீர்வு காணப் போகின்றோம். முதலாவதாக.. உழுந்து. உழுந்து ஒரு பிடி ஊற வைத்து விட வேண்டும். மறு நாள் தோலுடன் அரைத்து ஒரு துணியில் பொட்டனி போல் கட்டிக் கொள்ள வேண்டும்.
சிறிதளவு நல்லெண்ணெயை பாத்திரம் ஒன்றில் சூடாக்கி அதில் பொட்டனி கட்டிய உழுந்தை சில நிமிடம் வைக்க வேண்டும். நன்றாக சூடான நல்லெண்ணையில் உழுந்து பொட்டனி ஊறியதும்.. இறக்கி மிதமான சூட்டில் வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுங்கள். ஒரே நாளில் மூட்டு வலி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.இரவில் பால் குடிக்கும் போது பாலில் சிறிதளவு மஞ்சள் மற்றும் பூண்டு சேர்த்து குடித்தால் எழும்புகள் பலமாகும்.
முடக்கத்தான் இலையையை நல்லெண்ணையில் வதக்கி சாப்பிட்டு வர மூட்டு வலி குணமாகும். தூதுவளை இலை கிடைத்தால் மிஸ் பண்ணிடாதீங்க அதை மை போல் அரைச்சி துவையல் போல் சாப்பிட்டாலே மூட்டு வலி வந்த இடம் தெரியாமல் ஓடி விடும். அஸ்வகந்தம் கடைகளில் கிடைக்கும் சாதாரண பொடி. ஆக குறந்தது இந்திய காசு 10 ரூபாய் தான். இந்த பொடி பக்கட் ஒன்றை வாங்கி கொள்ளுங்கள்.
ஒரு கப் நீர் மற்றும் ஒரு கப் பால் இரண்டையும் மிக்ஸ் செய்து கொதிக்க வையுங்கள். கொதிக்கும் போது அதில் 5கிராம் அஸ்வகந்தம் பொடி சேர்ந்து பானம் ஒரு கப் ஆகும் வரை வற்ற வைக்கவும் வற்றியதும் வடித்து குடித்து வர மூட்டு வலி ஜென்மத்திலும் வராது ! பிடித்தால் உறவுகளுடன் பகிர்ந்துகொள்ளுங்களேன்.!