தீராத சளியா.!? இருமல் மூச்சு விட முடியவில்லையா.? இதோ உடனடி தீர்வு..!!
கால நிலை மாற்றம் ஏற்பட்டு விட்டது எல்லா இடத்திலும் மழை தான்.எங்கு பார்த்தாலும் நோய் தொற்றுக்கள் அதிகமாகி விட்டது. குழந்தைகள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை காச்சல், தடுமல், இருமலால் அவதி படுகின்றனர். மழை காலத்தில் சளி வருவது சாதரண விடயம் தான் ஆனால் அதனால் படும் அவஸ்தை தான் தாங்க முடிவதில்லை,
வெறும் சளிக்கு வைத்தியசாலை சென்றால் சனி தலைமேல் அமர்ந்து கொள்ளும் அதாங்க உள்ள பணம் எல்லாம் அங்கேயே போவது மட்டும் இன்றி குடிக்கும் ஆங்கில மருந்தின் வேகத்திற்கு நோயெதிர்ப்பு சக்தியும் குறைந்துவிடுகிறது. சரி இதற்கு என்ன செய்யலாம்.?இயற்கை முறையில் வைத்தியம் செய்ய வேண்டும் இலகுவாக எம்மிடம் இருக்கும் பொருட்களை கொண்டு இயற்கை மருத்துவம்.
இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு நோயையும் அடியோடு அழித்து விடுகிறது. இதற்கு பணமும் செலவு இல்லை. எம் முன்னோர்கள் எமக்காக இந்த மருத்துவங்களை வைத்துவிட்டு சென்றுள்ளனர். நாம் தான் இவற்றை சரியான முறையில் பயன் படுத்துவது கிடையாது.
கால நிலை மாற்றத்திற்கேற்ப வீட்டில் உள்ள அனைவருக்குமாக இந்த சளி விரட்டும் கசாயம் செய்யலாம்.இதற்கு தேவையான பொருட்கள், மிளகு, மல்லி, சீரகம், கற்பூரவள்ளி இலை 5, துளசி இலை சிறிதளவு, அத்துடன் தேவைக்கேற்ப பனங் கற்கண்டு.
முதலில் மிளகு மல்லி, சீரகம் மூன்றையும் சேர்த்து கொஞ்சம் வறுத்து ஓரளவு சூடனதும் நீர் தேவையாள அளவு ஊற்றி கொதிக்க வையுங்கள், அதனுடன் துளசி மற்றும் கற்பூரவள்ளி இலையை சேர்த்து நன்றாக கொதித்ததும் இறக்கி குடிக்கும் சூடு வந்ததும் வடித்து பனங் கற்கண்டு உடன் குடியுங்கள்.!