மூட்டு மூட்டாக வலிக்கிறதா.? என்ன செய்தாலும் குணமாகவில்லையா.? ஒரு முறை இதனை செய்தால் போதுமானது..!!
மனிதனாக பிறந்துவிட்டால் வலிகளை கடக்க வழிகள் தேவைப்படுகின்றது.” வளையாமல் நதிகள் இல்லை
வலிக்காமல் வாழ்க்கை இல்லை” ஆனால் வலிகள் நிறைந்த வாழ்க்கையை இலகுவாக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். வலிகள் என்று சொல்லும் போது மனதளவில் மட்டும் இல்லை உடல் அளவிலும் தான். யாரிடம் கேட்டாலும் தலைவலி என்று தான் சாதரணமாக சொல்வார்கள் அது இன்றிலிருந்து சில வருடங்களுக்கு முன்பு. இப்போது முதுகு வலி, மூட்டு வலி, முழங்கால் வலி என்று தான் சொல்கின்றனர்.
இதற்கான காரணம் உணவு பழக்க வழக்கங்கள் மட்டும் இன்று செய்யும் தொழில்களும் தான்.மண்வெட்டி பிடித்து வேலை செய்யும் விவசாயி தொடக்கம் நாட்காளில் அமர்ந்து நாளேடு படிப்பவர் வரை இந்த மூட்டுவலி உயிரை எடுக்கிறது. குறிப்பாக ஆண் பெண் இருபாலருக்கும் 30 வயதை கடந்துவிட்டாலே இது அதிகரித்து விடுகிறது.
பள்ளி காலத்தில் சிறுவர்களுக்கு இருந்தாலும் நாளடைவில் இல்லாமல் போய் 30 வயதை கடந்தவுடன் மறுபடி ஆரம்பித்து விடுகிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும் என்ன செய்தால் தீரும்? முதலில் எம்மை நாம் கவனித்துக் கொள்ள வேண்டும்.30 வயதை கடந்த பெண்கள் காலையில் கண்டிப்பாக ஒரு கப் பால் குடியுங்கள் இதனால் இந்த மூட்டுவலி குறைய அதிக வாய்ப்புகள் உள்ளது,
அத்துடன் எள்ளு ஐயோ எள்ளா எனக்கு வேண்டாம் என ஒதுங்கி செல்பவர்கள் தான் அதிகம் ஆனால்.. எள்ளு மூட்டுவலிக்கு சிறந்த உணவு. எள்ளை ஆண் பெண் இரு பாலருமே உண்ண வேண்டும் மூட்டு வலிக்கு மட்டும் இன்றி உடலில் பல நோய்களுக்கு எள்ளூ தீர்வாகிறது. இது போல இன்னும் நிறைய விடயங்களை அறிந்துகொள்ள கீழ் உள்ள வீடியோவை பாருங்கள்.!