காதல் திருமணம் செய்து மூன்றே நாளில் மனைவி செய்த செயல்..! துடிதுடித்து இறந்த கணவன்.!
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்துகொண்ட மனைவி திருமணமாகி 3 நாளில் பிரிந்து சென்றதால் விபரீத முடிவு எடுத்த கணவர் தொடர்பான செய்திகள் வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் நாட்டில் கோவை அருகில் கொன்னூரை சேர்ந்தவர் கோவிந்த் என்கிற கோவிந்த ராஜ். இவரும் மஞ்சுளா என்கிற 20 வயது பெண்ணும் 4 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த காதல் மஞ்சுளாவின் வீட்டிற்கு தெரிய வந்ததை தொடர்ந்து அவர்களின் வீட்டில் பெற்றோர் எதிர்ப்பை தெரிவித்ததுடன் மஞ்சுளாவிற்கு வெளியே செல்ல தடை விதித்தனர். இதனால் காதலனுடன் சென்ற மஞ்சுளா நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்துகொண்டார்.
திருமணமாகி 3 நாட்கள் மிக மகிழ்ச்சியாக இருந்த நிலையில் மஞ்சுளாவின் பெற்றோர் பொலீஸில் புகார் அளித்த நிலையில் மஞ்சுளா மற்றும் கோவிந்தை அழைத்து பொலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். இதன் போது பெற்றோர் அழுவதை பார்த்த மஞ்சுளா கணவருடன் செல்ல விருப்பம் இல்லை என்றதுடன் பெற்றோருடன் செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பொலீஸார் மஞ்சுளாவை பெற்றோருடன் அனுப்பியுள்ளனர். இதனால் மனமுடைந்த கோவிந்த் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை தொடர்ந்து கோவிந்தின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் மஞ்சுளா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் கொடுத்துள்ளனர். பொலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்..!!