அடுத்தவர்களின் தூக்கத்தை கெடுக்கும் அளவிற்கு குறட்டை வருதா.? அட இதோ நொடியில் தீர்வு…!
சிலர் தூங்கும் போது கேட்கும் சத்தம் குறட்டை. இதனால் பலரது தூக்கம் பாதிப்படைகிறது. ஆனால் ஆழ்ந்த உறக்கத்தில் அறியாமல் தான் குறட்டையை விடுகிறார்கள். இது தூங்கும்போது சுவாசப்பாதையில் அடைப்பு ஏற்பட்டு, மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம்தான் குறட்டை சத்தமாக வெளிவருகிறது.
நாம் பொதுவாக ஒரு தலையணை போட்டு தூங்குவது வழக்கம். இன்னும் கூடுதலான தலையணை போட்டு, தூங்கினால் குறட்டையிலிருந்து தப்பிக்கலாம். தலையணை இல்லாவிடினும் குறட்டை வரும்.
இரவு முழுவதும் பக்கவாட்டில் தூங்க முடியாது. ஆனால் குறட்டையிலிருந்து தப்பிக்க, ஒரு பக்கவாட்டில் தூங்கினால் போதும்.
புகைப்பிடிப்பது பல நோய்களை கொண்டு வரும். அதில் குறட்டையும் ஒன்று. புகைப்பிடிப்பவர்களுக்கு, அதிகமாக குறட்டை வரும்.இரவில் கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடக்கூடாது. அது குறட்டையை அதிகரிக்கும்.
இரவு தூங்க முதல் வெதுவெதுப்பான நீரில் ஏலக்காய் தூளை சேர்த்து குடித்துவிட்டு, தூங்கினால் குறட்டை வராது.
இரவில் பால் குடிப்பவர்கள் அதில் கொஞ்சம் மஞ்சள் தூளை சேர்த்து பருகலாம். இது உடலுக்கு ஆரோக்கியமும் குறட்டையும் வராதுசளி, ஜலதோசம் வந்தால் மூக்கடைப்பு ஏற்படும். இதனால் மூச்சு விட கஸ்டமாக இருக்கும். அப்போது குறட்டை வரும். அதற்கு நீராவி பிடித்து தூங்க வேண்டும்.