உடலுறவின் போது ஏற்படும் உடல் பிரச்சனைகளும் அதற்கான தீர்வும். திருமணமானவர்கள் கட்டாயம் படியுங்கள்…!!
திருமணத்தின் பின் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படுகின்ற மிகப்பெரிய பிரச்சனை தான் தாம்பத்திய உறவின் போது மர்ம உறுப்பில் ஏற்படும் எரிச்சல், மற்றும் வலி. பலர் இதனை தாங்கிக் கொண்டு உறவில் ஈடுபடுவது வழக்கம். இப்படி ஈடு படுவது சரியா.? இந்த வலி எதனால் ஏற்படுகின்றது.?
இதற்கான தீர்வு என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்: “எண்டோமெட்ரியோஸஸ்” இது பெண்களின் உள்சுவர் வெளி வளர்ச்சி என்று கூறப்படுகின்ற ஒன்றாகும். அதாவது கருப்பையில் இருக்க வேண்டிய சுவர் போன்ற சிறிய பகுதி ஒன்று வெளியே வளரும்.
இதனால் மாதவிடாய் நாட்களில் சாதாரணமாக ஏற்படுகின்ற உதிரப் போக்கு தடைப் பட்டு வலியுடன் வெளியேறும் இதனால் பெண்ணுடலில் வலி ஏற்படும். அடுத்தது கிருமிகளின் தாக்கம்.மாதவிடாய் நாட்களில் ஈர பதத்துடன் நீண்ட நேரம் இருப்பது. சிறுநீர் கழித்த பின் கழுவி சுத்தம் செய்யாமல் இருப்பது போன்றவை இதற்கான காரணங்களாகும்.
அது மட்டும் இன்றி சில நோய்கள் இருந்தால் கூட இந்த எரிச்சல் வலி போன்றவை இருக்கும்.குறிப்பாக வயிற்று பிடிப்பு அல்சர், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், போன்ற குடல் சம்மந்தமான நோய்கள் இருந்தாலும் இந்த எரிச்சல் வலி போன்றவை இருக்கும்.
உங்களுக்கு எரிச்சல் வலி இருந்தால் முதலில் வைத்தியரை நாடி ஆலோசனை பெறுங்கள். அதன் பின் பப்பாளி பழம் அதிகம் சாப்பிடுங்கள். அதே போல் தண்டுடன் கீரை வகைகள் சமைத்து சாப்பிடுங்கள்..! இந்த பதிவி பிடித்தால் பகிருங்கள்..!!