மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் திடீர் திருப்பம்..!!
மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை நிர்மாணிப்பதற்காக சவுதி அரேபியா நிறுவனத்தின் மூலம் இலங்கை வங்கியில் வைப்பிடப்பட்ட 3 பில்லியன் ரூபாய் வெளிநாட்டு கடனாக பெறவில்லை என தெரிவித்தார். மேலும் அந்த தொகை கடனாக பெற்றுக்கொள்ளப்பட்டதாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனக்கு அறிவிக்கப்படவில்லை என இலங்கை வங்கியின் அதிகாரி செனரத் பண்டார தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தனியார் நிறுவனத்திற்கு 3 வங்கி கணக்குள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கு 3 பில்லியன் ரூபாய் வெளிநாட்டு பணம் கிடைக்கப்பெற்றதாகவும் அது திரும்ப செலுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த பல்கலைக்கழகம் தொடர்பில் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான ஹிரா அறக்கட்டளைக்கு 314 மில்லியன் ரூபாய் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.