திருமணமாகி அடுத்த நாளே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 20 வயது யுவதி..! பெற்றோரினால் ஏற்பட்ட கொடுமை..!!
வேலூரில் 20 வயது யுவதி ஒருவர் திருமணமாகி 2 நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வேலூரை சேர்ந்த சாந்தகுமார் என்பவரின் மகளான மஹாலட்சுமி என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது வேலூரை சேர்ந்த சங்கர் என்கிற 45 வயதான நபருக்கு மஹாலட்சுமியை திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர். அதன் படி ஏப்ரல் 29ம் திகதி அவசர அவசரமாக மஹாலட்சுமிக்கும் சங்கருக்கும் கோயிலில் பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
பின் இருவரையும் மணமகன் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சென்ற மஹாலட்சுமி இரண்டு நாட்கள் கூட ஆகாத நிலையில் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். மனைவி சடலாமாக தொங்குவதை கண்ட சங்கர் பெற்றோருக்கு தெரிவித்ததை தொடர்ந்து சடலத்தை மீட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மஹலட்சுமியின் தங்கையான விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் பொலீஸார் விசாரணயை ஆரம்பித்துள்ளனர். அப்பா வயதுள்ள நபரை திருமணம் செய்து வைத்ததால் யுவதி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற ரீதியில் விசாரணை இடம்பெற்று வருகிறது..!!