சிங்கப்பூர் Malee குடிநீர் போத்தல்களை இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்த மலேசியா…!!!
மலேசியாவில் இருந்து Malee குடிநீர் போத்தல்களை சிங்கப்பூர் இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை சிங்கப்பூர் உணவு அமைப்பின் இணையப் பக்கத்தின் மூலமாக தெரிவித்துள்ளது. மலேசியாவின் இருந்து இறக்குமதி செய்யப்படும் Malee குடிநீர் போத்தல்களில் கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டதால் இவ்வாறு தடை செய்யப்பட்டதாகவும் மலேசியா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Malee தண்ணீர் மூன்று விதமான போத்தல்களில் வெளியாகின்றன. அதே வேளையில் தண்ணீர் போத்தல்களில் கண்டுபிடிக்கப்பட்ட கிருமி, நீர், செடி, மண் ஆகியவற்றில் இருக்கும் என்றும் அந்தக் கிருமி, நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு தொற்றும் என்று தெரிவிக்கப்பட்டது. இதில் இருந்து மீண்ட பின்னர் வழக்கம் போல சிங்கப்பூர் Malee குடிநீர் போத்தல்களை இறக்குமதி செய்யும் என்றும் சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.