ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க நிறுத்தப்பட வேண்டும் எனறு ஐ.தே.கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கூறியுள்ளார்கள்.!!
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க நிறுத்தப்பட வேண்டும் என்று அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், செயற்குழுவில் தீர்மானம் ஒன்றை கொண்டு வரப்படுவதாக கூறியுள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் நிறுத்தப்படும் அதே வேளையில் பிரதமர் வேட்பாளரையும் பெயரிட வேண்டும் என்ற யோசனையையும் தெரிவித்தார்.
மேலும் ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் நடைபெறும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி இலகுவாக வெற்றி பெற முடியும் எனவும் அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்தார். மேலும் சிரேஷ்ட உறுப்பினர்களின் இந்த யோசனைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு கூறியதோடு கட்சியின் மாநாட்டில் மக்களால் வேட்பாளர் தெரிவு செய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தார்.