கேரளாவில் தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றி செல்பி போட்டோ..!!
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்திலுள்ள சங்கனாச்சேரியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் இன்று ஏற்பட்ட
குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். பின்னர் அங்கு இருந்த ரயில் தண்டவாளம் ஒன்றில் தலையை வைத்து தற்கொலை செய்வதற்கு முயற்சித்தார். அப்போது கடைசியாக ஒரே ஒரு செல்பி எடுத்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி தற்கொலை செய்யப்போறேன் என்று மணி கூறினார்.
மணி அனுப்பிய செல்பி போட்டோவைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த நண்பர்கள் உடனே இந்த போட்டோவை ஆராய்ந்து எந்த தண்டவாளம் எந்த பகுதி அது உள்ளது என்பதையும் ஆராய்ந்தனர். போட்டோவிலுள்ள தண்டவாளத்தின் மஞ்சள் நிறத்தில் ரயில் மைல்கல், பதிவு எண் போன்றவை காணப்பட்டுள்ளது. அதனை குறிவைத்து ரயில்வே பொலிசாரின் உதவியோடு தற்கொலைக்கு முயன்ற மணி எந்த தண்டவாளத்தில் தற்கொலை முயற்சி செய்துள்ளான் என்பதை நன்கு கண்டுபிடித்தார்கள்.
அந்த தண்டவாளத்தின் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் உடனடியாக நிறுத்தப்பட்டனர். பின்னர் தற்கொலைக்கு முயற்சித்த மணியை ரயில்வே பொலிசார் காப்பாற்றி இனி எப்படியான ஒரு செயலை செய்யக்கூடாது என்றும் கூறி அவனை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். ஒரு செல்பி போட்டோ எடுத்தால் இளைஞனின் உயிரை காப்பாற்றப்பட்டது.