இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்த எச்சரிக்கை..!!
இலங்கையில் இனி எந்தவொரு நபரும் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்துவது பௌத்த மதத்திற்கு எதிரானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தனது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திக் கொள்ளல் அல்லது வேறும் ஒருவரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தல் போன்ற கீழ்த்தர செயகள் பௌத்த மத கோட்பாடுகளுக்கு எதிரானது.
தீவிரவாதம் அல்லது இனவாதம் போன்ற செயற்பாடுகளை எந்தவொரு காலத்திலும் பௌத்த மதம் ஏற்றுக்கொள்ள போவதில்லை. தங்கள் மொழி, இனம் மற்றும் மதம் தொடர்பாக பெருமிதம் கொள்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு.
நாட்டில் இனம், மதம், மொழி, என்ற ரீதியில் பெருமிதம் கொள்வதை விட்டு நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற ரீதியில் பெருமிதம் கொள்ள வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.