பயங்கரவாத செயலுக்கு நிதியுதவி வழங்கிய சிங்கப்பூர் வாசிக்கு சிறை!
பயங்கரவாத அமைப்புக்கு நிதியுதவி செய்தார் என்ற குற்றச்சாட்டில் சிங்கப்பூரைச் சேர்ந்த 36 வயதான இம்ரான் காசிம் என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கொள்கை பரப்பு அறிக்கைகளை அச்சிடுவதற்காக துருக்கியிலுள்ள ஒருவருக்கு பணம் அனுப்பினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே குறித்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் மீது, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இக்குற்றச் சாட்டு எழுப்பப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்த விசாரணையின் போது அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.