தெறிக்கவிட்ட சவுதி!
2019ஆம் ஆண்டில் மாத்திரம் 184 பேருக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சிச் தகவலை சர்வதேச மனித உரிமை அமைப்பான ‘ரிப்ரீவ்’ அறிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் குற்றங்களுக்கான தண்டனை என்பது படு பயங்கரமாக இருக்கும். அதற்குக் காரணம் அந்நாட்டில் மிகக்கடுமையான சட்ட திட்டங்கள் உள்ளமையே ஆகும்.
பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் அரசுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கே அதிகமான மரணதண்டனைகள் வழங்கப்படுகின்றன.
இதன்படி, 2019ஆம் ஆண்டில் மாத்திரமே 184 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சித் தகவலை சர்வதேச மனித உரிமை அமைப்பான ‘ரிப்ரீவ்’ வெளியிட்டுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 90 பேர் வெளிநாட்டவர்களும், 88 பேர் உள்நாட்டவர்களும் என்பது குறிப்பிடத்தக்க அதேவேளை, இதனுள் சிறுவர்களும் அடங்குகின்றனர் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.