ரஜினி பஞ்ச்; அதிர்ந்தது அரசியல் பரப்பு!
முரசொலி வைத்திருந்தால் திமுகவினர் என சொல்லிவிடலாம். ஆனால் துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள் என்று ரஜினிகாந்த் பேசியுள்ளமை தி.மு.கவினரைச் சீண்டியுள்ளது.
துக்ளக் பத்திரிக்கையின் 50ஆவது ஆண்டு விழாவில் வெளியிடப்பட்ட முதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் பெற்றார். இதன்பின்னர் அவர் பேசும்போதே இந்த சர்ச்சைக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசியவை வருமாறு-
“முரசொலி வைத்திருந்தால் திமுகவினர் எனச் சொல்லிவிடலாம். ஆனால் துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள்.
இப்போதெல்லாம் செய்தி என்ற பாலில், பொய் என்ற தண்ணீரை கலந்துவிடுகிறார்கள். பொய்யை உண்மையாக்காதீர்கள்.
சோ ராமசாமி மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தார். தற்காலத்துக்கு சோ ராமசாமி போன்ற பத்திரிகையாளர்கள் தேவை.
கவலைகளை நிரந்தரமாக்கி கொண்டால் நீ நோயாளி. தற்காலிகமானதாக மாற்றிக் கொண்டால் நீ அறிவாளி. கவலைகளை எல்லாம் தற்காலிகமானதாக ஆக்கிக் கொண்டவர் சோ ராமசாமி.” என்றார்.
இந்நிகழ்ச்சியில் வீடியோவில் பேசிய பிரதமர் மோடி, சோ ராமசாமியை புகழ்ந்து பேசினார். ஜனாதிபதி வெங்கட் நாயுடுவும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், ரஜயினின் பேச்சை அடிப்படையாகக் கொண்டு உதயநிதிஸ்டாலின் ருவிட் பண்ணியுள்ளார்.
அதில்,
“முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா-கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு’ என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன். பொங்கல் வாழ்த்துகள்” என்றுள்ளது.
முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா-கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு’ என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன். பொங்கல் வாழ்த்துகள்
— Udhay (@Udhaystalin) January 14, 2020