நான்கு தமிழர்களுக்கு சிங்கப்பூரில் ரகசியமாக மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறதா.?
மலேசியாவை சேர்ந்த நான்கு தமிழர்களுக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப் பட்ட நிலையில் ரகசியமாக இது நிறைவேற்றப் படலாம் என வழக்கறிஞர் தெரிவித்திருப்பது அவர்களது குடும்பத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. போதை பொருள் கடத்தல் மற்றும் வியாபார வழக்கில் கைதாகி மரண தண்டனை விதிக்கப் பட்ட நிலையில் சிறையில் இருக்கும் பன்னீர்செல்வம் பரந்தாமன்,
!Advert!
நாகேந்திரன் தர்மலிங்கம், தட்சணாமூர்த்தி கந்தையா, கோபி ஆயுடையான் ஆகிய தமிழர்கள் உட்பட 13 பேருக்கு ரகசியமான முறையில் மரண தண்டனை நிறைவேற்றப் பட வாய்ப்புகள் உள்ளதாக வழக்கறிஞர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். குறித்த பதின் மூன்று பேரும் நீதிமன்றத்தில் கருணை மனு அளித்திருந்தனர்
அதில் ஒருவரது கருணை மனு உடனடியாக நிராகரிக்கப்பட்ட நிலையில் மற்றவர்களின் கருணை மனுக்கள் அண்மையில் நிராகரிக்கப் பட்டது. இதனை தொடர்ந்து குடும்பத்தினர் பீதியில் உள்ளனர். இந்த நிலையில் குறித்த 13பேரின் தூக்கு தண்டனையும் ரகசியமாக நடத்தப் படலாம் என்று இது சிங்கப்பூர் சட்டத்தில் உள்ள விடயங்களில் ஒன்று எனவும் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.
!Advert!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.