இலங்கையில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் காதில் பூ வைத்துவிட்டு சிறப்பாக அரசியல் நாடகத்தை அரங்கேற்றிய முஸ்லீம் அரசியல் வாதிகள்…!
கடந்த ஏப்ரல் 21ம் திகதி இலங்கை வரலாற்றில் கறைபடிந்த நாள் என்றே சொல்ல வேண்டும். முஸ்லீம் தீவிரவாதிகளால் 250திற்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொன்று குவிக்கப் பட்டனர். இலங்கையில் நட்சத்திர ஹோட்டல்கள் புனித கிருஸ்தவ தேவாலயங்களை குறிவைத்து கொடூர தாக்குதல் நடத்தப் பட்டது. இதில் வர்த்தக துறையில் சிறந்து விளங்கிய இப்ராஹிம் ஹாஜியாரின் இரண்டு மகன்கள் உட்பட அவரது மருமகள்,என 9 தீவிர வாதிகள் இருந்தனர்.
அதன் போது இப்ராஹிம் ஹாஜியாரின் நெருங்கிய நண்பரான ரிஷாட் பதியுத்தீன் அவர்களுக்கும் இந்த தாக்குதலில் தொடர்ப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப் பட்டது. இதனை தொடர்ந்து பலர் கைது செய்யப் பட்டனர். இலங்கையில் உள்ள அத்தனை முஸ்லீம்களின் வீடுகள், பள்ளிகள், கடைகள், என அனைத்தும் சோதனை செய்யப் பட்டது.
!Advert!
இதன் போது ஒரு சில வீடுகளின் சமையளுக்கு பயன்படுத்துவதற்காக, கடற்தொழிலுக்காக, மட்டும் இன்றி இறைச்சி வெட்டுவதற்காக வைத்திருந்த கத்திகள் வாள்கள் போன்றவை கைபெற்றப் பட்டதுடன் கைது செய்யப்பட்டனர். அதன் பின் சிலர் விடுதலை செய்யப் பட்டனர். இன்னும் சிலர் இன்றளவும் சிறையில் உள்ளனர். இந்த தேடுதலின் போது அப்பாவி இளைஞர்கள் ஏராளமானோர் கைதானார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் பதவி விலக வேண்டும் என ரத்ன தேரர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார். இதனால் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த அத்தனை முஸ்லீம் அமைச்சர்களும் பதவி விலகினார்கள். அத்துடன் ஆளுநர்களான அசாத் சாலி, மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோரும் பதவி விலகினார்கள்.
!Advert!
ஆனால் தற்போது அத்தனை அமைச்சர்களும் மீண்டும் பதவியேற்றுக் கொண்டனர். அதாவது ரிஷாட் பதியுத்தீன் உட்பட. ஆளுநர்களுக்கு மட்டும் சாரி டாட்.காம். அப்படியானால் எதற்காக இந்த பதவி விலகல் நாடகம் என்பது யாரும் அறியாத நாடகம் தான்.
உண்மையில் கொல்லப் பட்டவர்கர்களுக்கு நியாயம் கிடைக்கவும் இல்லை கைது செய்யப் பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கவும் இல்லை, அரசியல்வாதிகள் மறுபடியும் தங்கள் புத்தியை காட்டிவிட்டார்கள் என்று தான் சொல்லவேண்டும்..!!