என்ன செய்தாலும் மலச்சிக்கல் மட்டும் குணமாகுதே இல்லையா.? இதனை ஒரு முறை செய்து பாருங்கள்…நிரந்தரமாக மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்து விடும்…!!
மலச்சிக்கல் தான் இன்று இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை. சாப்பிடுபவை எல்லாம் சேமிப்பாகி வயிறு வலி உயிர் போகும் அளவிற்கு வரும். டாய்லட் சென்றால் மலத்திற்கு பதில் இரத்தமும் புண்ணும் தான் மிச்சமாகும். இதனால் குழந்தைகள் முதல் பெரியயவர்கள் வரை அதிகம் பாதிக்கப் படுகின்றனர்.
இதற்காக ஒரு சூப்பர் டிப்ஸ். இது பாட்டி உள்ள வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியும். மற்றவர்கள் அறிந்துகொள்ள பகிர்கிறேன். இதனை இரண்டு நாட்களுக்கு அதிகமாக மலச்சிக்கல் இருந்தால் மட்டுமே பயன்படுத்துங்கள்..! வீட்டில் விளக்கெண்ணெய் இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு கப் வெதுவெதுப்பான நீர் எடுத்துக் கொள்ளுங்கள். வெதுவெதுபான நீரில் ஒரு கரண்டி விளக்கெண்ணெய் விட்டு மிக்ஸ் செய்து இதனை வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை அதாவது விடுமுறை நாள் இரவில் குடித்துவிட்டு அப்படியே தூங்கிவிடுங்கள். அவ்வளவு தான்.
மலச்சிக்கல் இருந்த நினைப்பே இருக்காது. சில நேரம் இரவில் டர் டர் ஆரம்பித்துவிடும் சிலருக்கு காலையில் ஆரம்பிக்கும். அடுத்த நாள் விடுமுறை என்பதால் வயிறு முற்றிலும் சுத்தமாகி விடும். அத்துடன் கீரை பூச்சித் தொல்லையும் இருக்காது…!