கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 19 வயது யுவதியை காட்டுப் பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த நபர்..! இந்தியாவில் தொடரும் கொடூரங்கள்..!!
கொரோனாவால் பாதிக்கப் பட்ட 19 வயது யுவதியை காட்டுப் பகுதியில் வைத்து ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தனது கோர தாண்டவத்தை இன்னும் நிறுத்திக் கொள்ளாத நிலையில் இந்தியாவில் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை நெருங்கி உள்ள நிலையில் மக்கள் கொரோனா வைரஸுடன் வாழ பழகிக்கொண்டுள்ளனர் என்றே சொல்ல வேண்டும். இந்த நிலையில் கேரளா பத்தினம்திட்டாவில் இளம் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது.
இதனை தொடர்ந்து குறித்த பெண்ணை வைத்தியசாலை அழைத்து வருவதற்காக நவ்பால் என்ற இளைஞனை அனுப்பியுள்ளனர். பெண்ணின் வீட்டிற்கு சென்ற நவ்பல் அம்புலன்ஸில் ஏற்றி வந்துள்ளார். வரும் வழியில் கொரோனாவால் பாதிக்கப் பட்ட பெண் என்பதையும் பொருட்படுத்தாமல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின் அருகில் உள்ள அரச மருத்துவ மனையில் விட்டுவிட்டு சென்றுள்ளார். தனக்கு நடந்த கொடுமை பற்றி வைத்தியர்களிடம் குறித்த பெண் கூறியதை தொடர்ந்து பொலீஸாருக்கு தகவல் கொடுக்கப் பட்டது, பொலீஸாரின் விசாரணையின் போது நவ்பல் குற்றத்தை ஒத்துக் கொண்டுள்ள நிலையில் நவ்பலை கேரள மாநில சுகாதார துறை சஸ்பெண்ட் செய்துள்ளது. அத்துடன் கைது செய்யப் பட்ட நவ்பல் தனிமை படுத்தலில் வைக்கப் பட்டுள்ளார்..!