நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனாவை நெருங்க விடாமல் தடுக்கும்… இயற்கையான வெங்காய டீ செய்வது எப்படி.? இதோ உங்களுக்காக..!!
தற்போது உலகை மிரட்டி வரும் தொற்று நோய்களில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் எமது உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில உணவுகளை எடுத்துக் கொள்வது கட்டாயமாகும். இன்று நாம் பார்க்கப் போவது வெங்காய டீயில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முறை தான்.
இதற்கு உங்கள் வீட்டில் சின்ன வெங்காயம் இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயம் இல்லாதவர்கள் பெரிய வெங்காயத்தை எடுத்து நறுக்கிக் கொள்ளுங்கள் ஒருவரின் தேவைக்கான அளவு ஒரு கப் அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரில் 15 சின்னவெங்காய. பெரிய வெங்காயம் என்றால் முக்கால்வாசி போதும்.
எடுத்து வைத்த தண்ணீரில் வெங்காயத்தை போடுங்கள். இதனை அடுப்பில் வைத்து தண்ணீரின் நிறம் மாறும் வரை கொதிக்க விடுங்கள் அரை கப் நீரானதும் இறக்கி அதில் ஒரு கரண்டி எலுமிச்சை சாறுவிட்டு மிக்ஸ் செய்யுங்கள். விரும்பியவர்கள் இதனுடன் கிறீன் டீ டாக் சேர்த்துக் கொள்ளலாம். வடித்து அரை கப் டீ எடுத்து நாட்டு கருப்பட்டி சேர்த்து குடியுங்கள்.
இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்துவதுடன், சிறப்பான உறக்கத்தையும் தருகிறது. உடல் வலி, சளி இருமல் போன்றவற்றையும் இந்த டீ குணமாக்குகிறது. இது வீட்டில் இலகுவாக செய்துகொள்ளும் ஒன்றாகும். அதிக செலவும் இல்லை, இயற்கை முறையில் கிடைப்பதால் பக்க விளைவுகளும் கிடையாது..!!