பிரான்ஸ் நாடாளுமன்றம் பெற்றோர்கள் பிள்ளைகளை அடிப்பதற்குத் தடை..!!
பிரான்ஸ் நாடாளுமன்றம் பெற்றோர்கள் பிள்ளைகளை அடிப்பதற்குத் தடை விதிக்கவுள்ளது. மேலும் இந்த தடைவிதிக்கப்பட்டாலும் அதை மீறும் பெற்றோர்களுக்குத் தனிப்பட்ட தண்டனை எதுவும் சட்டத்தில் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் பிள்ளைகளிடம் பிற்காலத்தில் வன்முறை காட்ட மாட்டார்கள் என்று திருமணச் சடங்கின் போது மணமக்கள் உறுதியளிக்கவேண்டும். எனவும் குறிப்பிட்டது.
பிராண்ஸில் தற்போது 85 விழுக்காட்டுப் பெற்றோர்கள் பிள்ளைகளை அடித்து வளர்ப்பதாகக் தெரிவிக்கப்படுகின்றது. தடை விதிப்பதன்மூலம் நிலைமையை மாற்றியமைப்பது அரசாங்கத்தின் நோக்கம்.