இந்த விதையை அரைத்து தலையில் சிறிதளவு தடவுங்கள், ஏன் தெரியுமா.? படித்து பகிருங்கள்.!!
தலைமுடி சம்மந்தமான பல நோய்களை எதிர்கொள்கிறோம். இது தலைமுடி உதிர்தல், பொடுகு பிரச்சனை என அதிகமாக உள்ளது. ஆனால் ஆளிவிதை கூந்தலை அடர்த்தியாக வளரவைக்கும். இது தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் பல நன்மைகளை பெறலாம். ஆளிவிதை எண்ணெயை சூடு செய்து, பின் தலையில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து தலையை கழுவினால் முடி அடர்த்தியாக வளரும் இதை வாரம் 2 முறை செய்யவேண்டும்.
முடி அடர்த்தியாவதற்கு ஆளி விதையை வெயில் காயவைத்து பொடி செய்து, பின் அதை தயிரில் கலந்து தலைமுடிக்கு பாக் போல போட்டு அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். இதை வாரம் 2முறை செய்தால் முடி அடர்த்தியாகும்.ஆளிவிதை எண்ணெய்- 1/4 கப், நீர் – 1கப், எலுமிச்சை சாறு 1டீஸ்பூன் எடுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் நீரையும், ஆளி விதை எண்ணெயும் கலந்து சூடுபடுத்தவும். அது கெட்டியாக வரும் வரை கலக்கியபடி சூடு செய்து, பின் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். அது ஜெல் பதத்திற்கு வரும்வரை அடுப்பில் வைத்து எடுக்கவும்.
தினமும் தூங்க முதல் இந்த ஜெல்லை தலையில் தடவி மசாஜ் செய்து வந்தால் கூந்தல் வளர்ச்சியடையும்.ஆளி விதையை நாம் சாப்பிடும் உணவுகளோடு சேர்த்து சாப்பிட்டதல் முடி வளரும். சாப்பிடுகின்ற உணவுகளும் தலைமுடிக்க சக்தியை வழங்கும்.நாம் சமைப்பதற்கு ஆளி விதை எண்ணெயை பயன்படுத்தி சமைக்கலாம். இது முடிக்கு ஆரோக்கியத்தை வழங்கும்.
கூந்தல் வளர்ச்சிக்கு புரதம் போலவே விட்டமின் ஈ யும் முக்கியம். இதில் விட்டமின் ஈ அதிகளவு உள்ளது. இது ஈரப்பதத்தை தக்க வைப்பதால் பொடுகு, அரிப்பிலிருந்து காப்பாற்றுகிறது. அதோடு ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது. இந்த விட்டமின் ஈ ஆளி விதையில் அதிகம் உள்ளது.