வருங்கால கணவர் முன் துடிக்க துடிக்க கொல்லப்பட்ட இளம் பெண்.! திணறும் பொலிஸார்.!!
வருங்கால கணவர் முன்னிலையில் துடிதுடிக்க கொல்லப் பட்ட இளம் பெண் தொடர்பான செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பூஜா என்ற பெண் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப் பட்டார். கொலையாளிகள் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில் பொலீஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது Gurugram பகுதியை சேர்ந்த பூஜா என்ற 26 வயது பெண் கல்லூரி காலத்தில் இருந்து இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். கல்லூரி படிப்பை முடித்த இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேர்ந்ததுடன் தன் காதல் பற்றி பெற்றோருக்கு கூறியுள்ளார்.
இரு வீட்டினரும் சம்மதம் தெரிவித்த நிலையில் இந்த மாத இறுதியில் திருமணம் நிச்சயம் செய்யப் பட்டுள்ளது. இதனால் தனது வருங்கால கணவருடன் ஹோட்டல் ஒன்றிக்கு காரில் சென்றுள்ளார். ஹோட்டலில் உணவு எடுத்துக் கொண்ட இவர்கள் வீடு திரும்பும் போது பைக்கில் வந்த மூவர் பூஜாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடி உள்ளனர்,
உடனடியாக பூஜாவை மீட்ட வருங்கால கணவர் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலீஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். குறித்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாததால் குற்றவாளிகள் அடையாளம் காண்பது கடினமாக உள்ளதாக அறியவருகின்றது.!