” மகளை கஷ்டபட விட முடியாது ” 4 வயது குழந்தையை கொடூரமாக கத்தியால் குத்திக் கொலை செய்த இளம் தமிழ் தாய்..!! உலகையே அதிர வைத்த விடயம்..!!
பிரிட்டனில் தனது 4 வயது குழந்தையை கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள முதற்சித்த தாய் தொடர்பான செய்திகள் வெளியாகி மக்களை அதிர வைத்துள்ளது. இலங்கையில் நெடுங்கேணி பகுதியை பிறப்பிடமாக கொண்டவர் சுதா. இவரது கணவர் சிவானந்தன் என்கிற சுகந்தன்.
இவர்களுக்கு சயனிகா என்ற 4 வயது பெண் குழந்தை இருந்த நிலையில் நேற்றைய தினம் சுதா தனது குழந்தையை இவ்வாறு கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தெரிய வருவதாவது கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். தனது உறவினர்களிடம் எனக்கு மோசமான கேன்சர் நோய் உள்ளது நான் இன்னும் சில நாட்களில் சாக போகிறேன்.
நான் இறப்பதில் கவலை இல்லை என் மகள் தனிமையில் தவிப்பாளே, அவள் கஷ்டப் படுவாளே என கூறியதுடன் நான் இறக்கும் போது என் மகளையும் கூட்டிச் சென்று விடுவேன் என கூறியுள்ளார். குழந்தையில் உயிரையே வைத்திருந்த சுதாவின் முழு எண்ணமும் குழந்தையை வளர்ப்பதில் இருந்தது என்கிறனர் உறவினர்கள். சம்பவ தினத்தன்று சாதாரணமாக தான் அனைவரும் சுதாவை பார்த்துள்ளனர்.
ஆனால் திடீரென குழந்தையை கத்தியால் பலமுறை கத்தியால் குத்திய சுதா தானும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் இந்த நிலையில் ஸ்கொட்லாண்ட்யார்ட் பொலீஸார் மற்றும் மக்கள் சுதாவை மீட்டு வைத்தியசாலையில் அவசர சிகிச்சை அனுமதித்துள்ள நிலையில் சயனிகா மரணமடைந்துள்ளார். இது மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது..!!